இந்திய பண்பாடு தொன்மையானது .இந்திய பெண்கள் கலாசாரம் நிரம்பியவர்கள் ,ஒழுக்கம் நிறைந்தவர்கள் .,இந்தியர்கள் சுறுசுறுப்பு உடையவர்கள் ,இந்திய கொயல்கள் கலை நுணுக்கம் உடையவை ,இந்திய மக்கள் அன்பு நிறைந்தவர்கள் ..
இதெல்லாம் சரி .ஆனால் இந்திய வீரம் மிக்க நாடா ?
இந்த கேள்விக்கு பதில் உண்டா ?
இதென்ன கேள்வி ?கார்கில் யுத்தத்தில் எதிரிகளை ஓட ஓட விரட்டினோமே என்கிறீர்களா?
அது இல்லை .எதிரிகள் வந்த பின் பாதி அளவுக்கு உள்ளே நுழைந்து ,ஒரு வழி செய்த பின்னர் ,எதிர் தாக்குதல் நடத்தி முக்கி திணறி அவர்களை அவர்கள் எல்லைக்கு தள்ளுவதற்கு பெயர் வீரமா ?
அல்லது முன்கூட்டியே யூகம் செய்து ,அவர்களை எச்சரித்து ,அதன் பின்னரும் அவர்கள் வாலாட்ட நினைத்தால் வாழை ஓட்ட நறுக்குவது அதுவும் நம் நாட்டுக்குள் நுழையும் முன்னரே செய்வது வீரமா ?
அய்யா ..ஜனநாயகம் என்பதும் ,அமைதியுடன் இருப்பதும் ,சொரணை கெட்ட தனமாக தாக்குதல் நடத்தி பேரிழப்பு செய்த பின்னரும் ,அவர்களை ஏதும் செய்யாமல் ..இந்திய அமைதிக்கும் ஒரு எல்லை உண்டு என ஓராயிரம் தடவை தேஞ்சு போன ரெக்கார்டு போல சொல்லி கொண்டிருப்பதன் பெயர் ,
ராஜ தந்திரமா ?
ஈரான் ..எப்போதாவது அணு ஆயுதத்தால் தாக்குமோ என சந்தேகப்பட்டு ,அதன் அதிபரையே தூக்கில் ஏற்றியவர்கள் அமெரிக்கர் கள்...
அட..நீங்க அது மாதிரி செய்ய வேண்டாம்... மும்பை தாக்குதலுக்கு காரணமான பாகிஸ்தான் தீவிரவாத கூடாரங்கள் மீது கூட தாக்குதல் நடத்தவில்லை என்றால் எப்படி ?
இதை எச்சரிக்கை செய்து கொண்டே காலம் கடத்தும் அரசியல்வாதிகள் ராஜ தந்திரம் என்கிறார்கள் ...
தலிபான்களால் இந்தியாவிற்கு பெரிய ஆபத்து ஏற்பட போவதாக ,அமெரிக்க வெளியுறவு செயலர் எச்சரிக்கை செய்துள்ளார் .கவலை தரும் இந்த செய்தியையும் எருமை மேல் பெய்த மழைபோல தான் பாவிக்க போகிறார்கள் ..
இந்திய சொரணை தெரிந்து தான் ..ராஜபக்சே.., ஐ.நா உட்பட எந்த நாடு சொன்னாலும் தமிழர் மீது தாக்குதல் தொடரும் என கொக்கரிக்கிறார் ...
வீரமற்ற எந்த நாடும் முன்னேறாது என திருவள்ளுவர் அறத்துப்பாலில் கூறுகிறார் ..
பெண் தலைமை ஆட்சி பெண்மை தனமாகத்தான் இருக்குமோ ...ஜெ வாய் இந்த லிஸ்டில் சேர்த்த இயலாது .அவர் எந்த விசயத்தையும் திசை திருப்புவதில்லை .
அதை கூர் மழுங்க செய்வதில்லை ...
Tuesday, February 17, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment